இராஜதந்திரிகள் ஹக்கீமை, தொடர்புகொண்டு பேச்சு - முஸ்லிம் பிரச்சினைகள் பற்றி பேச்சு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் இரு வெளிநாட்டு இராஜதந்திரிகள் தனித்தனியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளனர்.
அமெரிக்கத் தூதுவர் அலய்னா பி. டெப்லிட்ஸ், பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சரா ஹுல்டன் ஆகியோரே ஹக்கீமுடன் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளனர்.
நாட்டின் தற்போதைய சமூக, அரசியல் சூழ்நிலை, சிறுபான்மையினர் எதிர் நோக்கும் பிரச்சினைகள், கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்பாகவும், சட்டத்தின் ஆட்சி உரிய முறையில் நிலைநாட்டப்பட வேண்டியதன் அவசியம், பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஜனநாயக விழுமியங்களைப் பேணுவதில் ஏனைய நாடுகளிலிருந்து பகிர்ந்து கொள்ள வேண்டிய அனுபவம் என்பன பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
ஜனாஸா எரிப்பு பற்றிய கதை இல்லையா?
ReplyDelete