Header Ads



கிரேன்பாஸ் நாகலகம் பகுதி முடக்கம்

கிரேன்பாஸ் நாகலகம் பகுதியில், கொவிட் 19 வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டதையடுத்து,  குறித்த பகுதியை இன்று (16) முதல் முடக்க பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

அத்துடன், குறித்த பகுதிக்குப் பிரவேசிக்கும் வீதியும் முழுமையாக மூடப்பட்டுள்ளதாக, இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 

ஜா-எல சுதுவெல்ல பகுதியில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றாளருடன் நெருங்கிப் பழகிய, கொழும்பு-குணசிங்கபுர, வேல்லவீதி, கிரேன்பாஸ் மற்றும் நாகலகம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 100 பேர் நேற்று (15) தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

இவர்கள் திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்து அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.