தடுப்பூசிகளை ஏற்ற தாயும், குழந்தையும் மாத்திரம் வைத்தியசாலைக்கு வந்தால் போதுமானது
குழந்தைகளுக்கான நோய்த்தடுப்பு ஊசிகளை வழங்கும் பணிகளை எதிர்காலத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்றுநிருபமும் தன்னால், வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சில தினங்களில் தளர்த்தப்படவுள்ள ஊரடங்குச் சட்டத்தின் பின்னர், வைத்தியசாலைகளும் சில விதிமுறைகளுக்கு அமைய பணிகளை ஆரம்பிக்கவுள்ளன.
அதன்போது, குழந்தைகளுக்கான நோய்த்தடுப்பூசிகளை ஏற்றும் சந்தர்ப்பங்களில் தாயும், குழந்தையும் மாத்திரம் வைத்தியசாலைக்கு வருகை தருவது சிறப்பானதாகும் என்றார்.
மேலும், குறித்த சந்தர்ப்பத்தில் வைத்தியசாலைகளில் இருப்போரின் எண்ணிக்கையை குறைந்தளவில் பேணுவதை தங்களால் உறுதிசெய்து கொள்ள முடியுமெனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment