மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை தியாகம்செய்த, இலங்கை பெண் லண்டனில் கொரோனாவுக்கு வபாத்
வாழைச்சேனையை பிறப்பிடமாகவும் லண்டனின் ஈஸ்ட்ஹாம் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட மிஹ்ராஜியா முஹைதீன் என்பவர் கொவிட் 19 காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று திங்கள்கிழமை (20.04.2020) லண்டலின் மரணமடைந்துள்ளதாக லண்டனில் வசிக்கும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
கொவிட் 19 நோய் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 20.04.2020ம் திகதி வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
மிஹ்ராஜியா முதியோர் காப்பகத்தில் பணிபுரிந்தார் அங்கு கடமை புரியும் போதே அவருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றியது மற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக தனது வாழ்க்கையை தியாகம் செய்தார் என்பது மிகையாகாது.
இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளைகளுமாக மூன்று பிள்ளைகளின் தாயான மிஹ்ராஜியா முஹைதீன் வாழைச்சேனையைச் சேர்ந்த சகோதரர் முபாரக்கை திருமணம் செய்து லண்டனுக்கு வசிப்பதற்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
இன்னா லில்லாஹி வஇன்னா இலய்ஹி ராஜுஊன்.
ReplyDeleteinnalillahiwainnailaihirojiun
ReplyDeleteAllahummagh Firlaha Warahamha
ReplyDeleteانالله وانا إليه راجعين
ReplyDelete