“மதுரையில் போலிஸ் தாக்கியதில் 71 வயது இஸ்லாமிய முதியவர் பரிதாப வபாத்” : காவல்துறை நிகழ்த்திய கொடூரம்
கொரோனா பரவலைத் தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பொதுமக்கள் பலர் பல இன்னல்களை தினந்தோறும் சந்தித்து வருகின்றனர். குறிப்பாக ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது போலிஸார் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்துவது குறித்த வீடியோக்கள் சமீபமாக வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், இளந்தமிழகம் அமைப்பைச் சேர்ந்த ரபீக் ராஜா என்பவரின் தந்தையை போலிஸார் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் அண்ணா நகர் கருப்பாயூரணி பகுதியைச் சேர்ந்தவர் ரபீக் ராஜா. இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது தந்தை அப்துல் ரஹீம், நிஷா பிராய்லர்ஸ் என்னும் கறிக்கடை நடத்தி வருகிறார். அரசின் உத்தரவை ஏற்று கடையை மூடிவிட்டு சமூக விலகலை முறையாக கடைபிடித்துவந்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் கடையில் உள்ள கோழிகளுக்கு உணவு வைப்பதற்காக அவரது மருமகனை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றுள்ளார். கோழிக்கு உணவு வைத்துவிட்டு கிளம்பும் நேரத்தில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலிஸார் பெரியவர் அப்துல் ரஹீமையும், அவரது மருமகனையும் காரணமே கேட்காமல் தாக்கியுள்ளனர்.
this is the nature of Indian Police?
ReplyDeleteindian police neruppu vaychu uyiroda kollanam
ReplyDeletePride to MODI
ReplyDelete