Header Ads



கொழும்பிலே அதிக கொரோனா நோயாளர்கள், 2 வது புத்தளம், 3 களுத்துறை, 4 கம்பஹா, 5 கண்டி

நாட்டில் கொரோனா நோயாளர்கள் மூவர் இன்று (01) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 146 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது 126 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிக கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று,
புத்தளத்தில் 25 பேர்
களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 24 பேர்
கம்பஹா மாவட்டத்தில் 11 பேர்
கண்டி மாவட்டத்தில் 4 பேர்
இரத்தினபுரியில் 3 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, குருநாகல், காலி, மட்டக்களப்பு, பதுளை, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை மாவட்டத்தில் தலா ஒரு நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, Covid-19 தொற்றுக்குள்ளாகிய 18 ஆக குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.