அடக்கம் செய்வதற்கான முஸ்லிம்களின் உரிமையை உறுதிப்படுத்துக - 164 சிவில் செயற்பாட்டளர்களும், 17 நிறுவனங்களும் கோரிக்கை
கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை, அகற்றுவது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல்களை பின்பற்றுமாறும், அடக்கம் செய்வதற்கான உரிமையை கண்ணியப்படுத்துமாறும் 164 சிவில் சமூகப் பிரதிநிதிகளும், 17 நிறுவனங்களும் ஜனாதிபதியிடமும், அதிகாரிகளிடமும் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஜனாதிபதி, சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கும் இந்தக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
முஸ்லிம்கள் தமது சமய நம்பிக்கையின் அடிப்படையில் உடல்களை அடக்கம் செய்யவே விரும்புகிறார்கள். எனினும் அவர்களது விருப்பங்களுக்கு புறம்பாக உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன. இது இலங்கை முஸ்லிம்களை உளவியல் ரீதியாக பாதிப்படையச் செய்துள்ளது எனவும் அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Still there are muslims to support this government.. with their own justification...
ReplyDeleteThey will only realise when a death fall in their families.