மறு அறிவித்தல்வரை பொதுஜன பெரமுனவின் தலைமையகம் மூடப்பட்டது
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தை இன்று 20 முதல் மறு திகதி அறிவிக்கும் வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு ஏதுவாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த காலப்பகுதியில் கட்சியின் தலைமையகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளும் மூடப்படும்.
எனினும் ஊடகப் பிரிவு மாத்திரம் குறைந்த ஆளணியுடன் இயங்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Post a Comment