ஈரான் பாராளுமன்ற உறுப்பினர் கொரோனா வைரசிற்கு பலி
ஈரானின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பினால் உயிரிழந்துள்ளார் என அந்த நாட்டின் செய்திச்சேவையொன்று தெரிவித்துள்ளது.
தலைநகர் டெஹ்ரானை சேர்ந்த பட்டமே ரபார் என்ற நாடாளுமன்ற உறுப்பினரே உயிரிழந்துள்ளார்.
ஈரானில் 124 பேர் வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ள நிலையிலேயே பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் மரணம் குறித்த செய்தி வெளியாகியுள்ளது.
ஈரானின் ஆன்மீக தலைவரிற்கு ஆலோசனை வழங்கும் குழுவின் உறுப்பினர் ஒருவர் மார்ச் இரண்டாம் திகதி கொரோனவைரஸ் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த உயிரிழப்புகள் ஈரானின் அரசாங்க ஸ்தாபனங்களிற்குள் வைரஸ் பரவிவருவதை வெளிப்படுத்தியுள்ளன.
Post a Comment