Header Ads



மைத்திரியின் சகோதரர் வைத்தியசாலையின், முழு செலவுகளையும் பொறுப்பேற்றார்

கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக ஒதுக்கப்பட்டுள்ள வெலிகந்த வைத்தியசாலையின் அனைத்து செலவுகளையும் தான் ஏற்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் இறுதி நோயாளி வெளியேறும் வரை அனைத்து செலவுகளையும் ஏற்பதாக அவர் குறிப்பபிட்டுள்ளார்.

அதன் முதல் கட்ட நடவடிக்கையாக நேற்றைய தினம் 55 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை அவர் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அரசி தொடர்பான பிரச்சினைகளை அனைத்தையும் நிறைவு செய்வதாகவும் கொரோனா தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள அதனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.