வீண் வதந்திகளை, பரப்ப வேண்டாம் - பிரதமர் மகிந்த கோரிக்கை
கொரோனா வைரஸ் பரவலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் வேலைதிட்டங்கள் தொடர்பில் வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்கள் ஊடாக இவ்வாறு தவறான விமர்சனங்களை முன்னெடுக்க வேண்டாம் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் அதேவேளை, மக்களுக்கு அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களை வழங்குவதற்கான சிறப்பு திட்டத்தை அரசாங்கம் செயற்படுத்தி வருகிறது.
அத்துடன், பொறுப்பான அரசாங்கமாக, மக்களின் நலனுக்காக பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
Post a Comment