80 முஸ்லிம்களை காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் கொண்டுசேர்த்த மொஹிந்தர்சிங்
கிழக்கு டில்லியில் மத வெறியர்களால் கலவரம் உச்சத்தில் இருந்த நேரத்தில் தனது உயிரை துச்சமென நினைத்து மொஹிந்தர் சிங்கும் அவரது மகன் இந்தர்ஜித் சிங்கும் 80 முஸ்லிம்களை காப்பாற்றி பாதுகாப்பான இடத்தில் கொண்டு சேர்த்துள்ளனர்.
கோகுல்புரியில் முஸ்லிம்களின் வீடுகளை குறிவைத்து தாக்குதல் துவங்கியவுடன் தந்தை மொஹிந்தர்சிங் ஸ்கூட்டரிலும், மகன் இந்தர்ஜித் சிங் புல்லட்டிலும் ஒரு மணி நேரத்தில் 20 முறை திரும்ப திரும்ப விரைந்து பயணித்து முஸ்லிம் பெண்கள், குழந்தைகள் மற்றும் ஆண்களுக்கு டர்பன் அணிவித்தும் காப்பாற்றி உதவினர்
கோகுல்புரியில் எலெக்ட்ரானிக் ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தும் மொஹிந்தர்சிங் , இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்ட தினத்தில் எங்கள் சீக்கிய சமூகத்தவருக்கு எதிரான வன்முறை கண்முன்னே வந்ததால் நானும் மகனும் 80 இஸ்லாமிய சகோதரர்களை விரைந்து சென்று காப்பாற்றியதாக கூறுகிறார்,
Great Human Being... Salute to you Mr.
ReplyDelete