தனியார் வைத்தியசாலைகளில் நிபந்தனைகளுடன் கொரோனா பரிசோதனை - 6000 ரூபா அறவிடப்படும்
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிய பரிசோதனையை மேற்கொள்ளவதற்கு தனியார்துறை வைத்தியசாலைகளுக்கும் அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த அனுமதியானது வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
அதன்படி தனியார் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று சோதனைகளுக்கான கட்டணமாக சுமார் 6000 ரூபா அறவிடப்படும்.
அத்துடன் தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தொடர்பான சோதனை முடிவுகள் 24 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அப்போ இலங்கையில் இருகின்ற எல்லாருக்கும் கொரொனா என்று சொல்லி பல தனியார் வைத்திய சாலைகளின் வசூல் வேட்டை கள கட்டப்போகுது என்று சொல்ரீங்க.
ReplyDelete