இலங்கையைச் சேர்ந்த 2 முஸ்லிம்களுக்கு, பிரான்ஸில் கொரோனா தொற்று
- அன்ஸிர் -
இங்கையில் இருவேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2 முஸ்லிம் சகோதரர்களுக்கு, பிரான்ஸில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இவர்கள் பிரான்ஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவர்கள் தற்போது படிப்படியாக குணமடைந்து வருவதாக, பிரான்ஸில் உள்ள இலங்கை முஸ்லிம் சகோதரர்கள், ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் சுட்டிக்காட்டினர்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் யாதெனில், இலங்கையர் வேறு ஓரு சிகிச்சைக்காகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த வார்ட்டில் ஏற்கனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர் மூலமாகவே, இலங்கை முஸ்லிம் சகோதரரும் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக அறிய வருகிறது.
Is there any wonder....if those are Muslims????
ReplyDeleteAround the world, all people are suffering there is no religion....pls stop to establish such a boolshit news