Header Ads



மிளகாய் தூள் Mp க்கு உயர் பதவி

நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, நாடாளுமன்றத்தின் ஆளும் கட்சியின் உதவி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாராநாத் பஸ்நாயக்க மற்றும் டி.வி.சானக்க ஆகியோரும் உதவி அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரசன்ன ரணவீரவை பிரதமர் மகிந்த ராஜபக்ச தனது இந்திய விஜயத்தின் போது தன்னுடன் அழைத்துச் சென்றமை குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தது.

பிரசன்ன ரணவீர நாடாளுமன்றத்தில் 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடந்த அமளியின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மிளகாய் தூள் கலந்த தண்ணீரை வீசி தாக்குதல் நடத்தியிருந்தார்.

2 comments:

  1. கரு மிரிஸ் குடு பிரசன்ன ரணவீர கௌரவ பாரளுமன்ற உறுப்பினர் என பாராளுமன்ற ஹன்சாட்டில் அவருடைய பெயரைப் பதிவு செய்ய ஏற்பாடுகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. இதுதான் இன்றைய அரசியல் சூழ்நிலை.
    பலமற்ற எதிர்க்கட்சியின் இயலாத்தன்மையின் பிரதிபலிப்பு
    மர்சூக் மன்சூர்
    தோப்பூர்-07

    ReplyDelete

Powered by Blogger.