இரத்தினபுரியில் பாடசாலை மாணவரை கம்பத்தில் கட்டிவைத்த சம்பவம்
பாடசாலை மாணவர் ஒருவரை கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் ஒன்று இரத்தினபுரியில் பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளி ஒன்றும் தற்போது சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.
எவ்வாறாயினும் சம்பவம் தொடர்பில் காவல்துறையினரை வினவியது போது சம்பவம் தொடர்பிலான எந்தவொரு முறைப்பாடுகளும் காவல் நிலையத்திற்கு கிடைக்கவில்லை என இரத்தினபுரி காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும், மாணவனின் பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்களினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் தற்போது காயங்களுக்கு உள்ளான அந்த மாணவன் இரத்தினபுரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
Post a Comment