Header Ads



டெல்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூரம், உலகை உலுக்கிய புகைப்படங்கள்


டெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சிஏஏ போராட்டம் கலவரமாக உருமாறியுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது.

டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நேற்று முதல் நடந்து வருகிறது.

அதேபோல் நேற்று இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் சிறிய மசூதி ஒன்றும் பஜன்பூரா பகுதியில் கொளுத்தப்பட்டது.

முக்கியமாக இஸ்லாமிய இளைஞர் ஒருவரை சுற்றி நின்று கலவரக்காரர்கள் தாக்கும் புகைப்படமும் வைரல் ஆகியுள்ளது. அந்த இளைஞர் தன்னை விட்டு விடுங்கள் என்று உயிருக்கு கெஞ்சிய நேரத்திலும் கூட அவரை விடாமல் தொடர்ந்து தாக்கி இருக்கிறார்கள்.

அவர் ரத்தம் வடிய தரையில் அமர்ந்து இருக்கிறார். அவரை சுற்றி ஹெல்மெட் மாட்டிக்கொண்டு கையில் குச்சியுடன் பலர் தாக்க தயாராக இருக்கிறார்கள்.

இந்த புகைப்படம்தான் டெல்லி கலவரத்தை அப்படியே எடுத்துக்காட்டி இருக்கிறது. உலகம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்திய இப்புகைப்படங்களை பலர் ஷேர் செய்து வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தை ராய்டர்ஸ் பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக் (REUTERS - Danish Siddiqui) எடுத்துள்ளார்.

நேற்று மாலை தொடங்கிய கலவரத்தில் மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


2 comments:

  1. அல்லாஹ் உங்கள் கரங்களை நாசமாக்குவானாக

    ReplyDelete
  2. மனிதன் அறியாமைக்காலத்திற்கு (இஸ்லாமிய பாஷையில் ஜாஹிலியத்திற்கு) மீண்டும் மாறிக்கொண்டிருப்பதும், முஸ்லிம் சமூகம் உலகத்தின்மீது ஆசைகொண்டு தனக்குள் வேற்றுமைப்பட , முஸ்லிமல்லா சமூகங்கள் வேற்றுமைக்குள் ஒற்றுமைப்பட்டு முஸ்லிம் சமூகத்தை நசுக்குவதும், முஸ்லிம்களில் பலர் கோழைகளாக மாறி சிதறுண்டு ஓடுவதும், சிலர் நயவஞ்சகர்களாக (முனாஃபிக்குகளாக) மாறுவதும், இன்னும் சிலர் தங்களை மாத்திரம் சிந்திப்பவர்களாக, சுயநலமிகளாக வாழ்வதும் .... (இஸ்லாத்தின் பார்வையில்....) இப்பிரபஞ்சம் தனது இறுதிநாட்களை எண்ணிக்கொண்டிருக்கின்றது என்பது நிதர்சனமான உண்மையாகின்றது.

    யா அழ்ழாஹ்! தினந்தோறும் அநியாயக்காரர்களின், கருணையே இல்லாது மிருகங்களைவிட மிகக்கேவலமான முறையில் செய்யும் அட்டூழியங்களினால், தனது ஏனைய முஸ்லிம் சகோதர்கள் தினந்தோறும் படும் இன்னல்கள், துன்பங்கள், வேதனைகள் கண்டு, ஒரு சொட்டு கண்ணீரென்றாலும் சிந்தக்கூடிய, அல்லது ஆகக்குறைந்தது, உலகில் முஸ்லிம் உம்மாவுக்கு என்ன நடக்கிறது என்றாவது அறிந்து கொள்ளக்கூடிய ஆவல் கொண்டவர்களில் உள்ளவர்களாக, பாதிக்கப்படும் முஸ்லிம்களுக்காக உன்னிடம் தினந்தோறும் பிரார்த்திக்கக்கூடிய நல்ல உள்ளங்கொண்ட அடியார்களில் உள்ளவர்களாக என்னையும், என்னைச்சார்ந்தோரையும் ஆக்கி அருள்புரிவாயாக .. ஆமீன்.

    ReplyDelete

Powered by Blogger.