Header Ads



ஶ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி, அவரது மனைவிக்கு பிடியாணை

ஶ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு பிடியாணை உத்தரவு பெற்று கைதுசெய்யுமாறு  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு  சட்டமா அதிபர் பணித்துள்ளார்.

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோருக்கு எதிராக குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு விமானங்களை கொள்வனவு செய்த போது, இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அதற்கமையவே இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.