தேர்தல் பிரச்சாரமானது தெளிவாக கண்ணீர், அனுதாபத்தை கொண்டு மேற்கொள்ளப்படும்
அரசாங்கத்தின் எதிர்கால தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவே அமெரிக்கா இராணுவ தளபதிக்கு அமெரிக்காவுக்குள் வர தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
போர் காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்சவுக்கு அமெரிக்காவினால் சிக்கல் இன்றி இராணுவ தளபதிக்கு மாத்திரம் சிக்கலை ஏற்படுத்தியமைக்கு தேர்தலே காரணம்.
மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
பொதுத் தேர்தல் பிரச்சாரமானது தெளிவாக கண்ணீர் மற்றும் அனுதாபத்தை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.
Post a Comment