தாய்லாந்தில் வணிக வளாகத்திற்குள் கண்ணில் பட்டவர்களை சுட்டுக் கொன்ற இராணுவ வீரர்
தாய்லாந்தில் பிரபல வணிக வளாகம் ஒன்றில் ஆயுதங்களுடன் நுழைந்த இராணுவ வீரர் ஒருவர், பொதுமக்கள் மீது சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் நக்கோன் ராட்சாசிமா மாகாணத்தில் உள்ள டெர்மினல் 21 வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பயங்கர ஆயுதத்துடன் நுழைந்த இராணுவ வீரர் ஒருவர், கண்ணில் பட்டவர்களை நோக்கி சரிமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தைத் தவிர்க்கவும், காவல்துறை அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும் சட்ட அமலாக்கத்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் சுமார் 12 பேர் இறந்துள்ளதாகவும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்ளுர் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே தாக்குதலில் ஈடுபட்ட நபர் கர்னல் சக்ரபன் தோம்மா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தோம்மாவின் பேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததில் அவர் சம்பவத்தின் போது துப்பாக்கியுடன் இருக்கும் படத்துடன் "எப்படியிருந்தாலும், மரணத்தை தவிர்க்க முடியாது" என பதிவிட்டுள்ளார்.
தாக்குதல்தாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மாணவர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் சென்றவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக உயிரிழப்பு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
If he had a Muslim name they will label him as a Islamic terrorist
ReplyDelete