கொலை செய்துவிட்டு, லொறி திருடிச் செல்லப்பட்டது
ஜா-எல, நிவன்தம வீதியில் நபர் ஒருவரை கொலை செய்து அவரின் லொறி திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கொலை செய்யப்பட்ட நபர் நேற்று (31) அவரது சிறிய ரக லொறியில் குடெல்ல பிரதேசத்திற்கு பயணம் ஒன்று செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ள நிலையில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
55 வயதுடைய ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஜா-எல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment