நாட்டின் பிரதான பிரச்சினைகளை மூடிமறைக்க, குரல் பதிவுகளை பயன்படுத்தி வருகின்றனர்
தனது தொலைபேசி உரையாடல் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது குரல் பதிவு என வெளியிடப்பட்டுள்ள குரல் பதிவு திரிபுப்படுத்தப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எனது தொலைபேசி உரையாடல் எனக் கூறும் இரண்டு குரல் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. முதலாவது குரல் பதிவுக்கும் இரண்டாவது குரல் பதிவுக்கும் இடையில் காணப்படும் உரையாடலின் தன்மையை பாருங்கள்.
இரண்டாவது குரல் பதிவு என வெளியிடப்பட்டுள்ள குரல் பதிவை திரிபுப்படுத்தி, தொகுத்து வெளியிட்டுள்ளனர்.
நாட்டின் பிரதான பிரச்சினைகளை மூடி மறைக்க இந்த குரல் பதிவுகளை பயன்படுத்தி வருகின்றனர். முடிந்தால், உண்மையான குரல் பதிவை பகிரங்கப்படுத்துமாறு சவால் விடுப்பதாகவும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
செய்ய வேண்டியவற்றையும் கூத்தையும் கும்மாளங்களையும் போட்டுவிட்டு இனி நான் மணல் மேடையில் ஒழித்துக் கொண்டிருக்கும் கொரவாக்கன் என உலகமெங்கும் பறைசாட்டத் தொடங்கிவிட்டார்கள்.
ReplyDelete