சந்திரிக்காவை நீக்க நடவடிக்கையா..?
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவிடம் இது தொடர்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்துக் கொண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் மேடையில் ஏறும் தலைவர்கள் அவசியமில்லை என தொகுதி அமைப்பாளர்கள், பொதுச் செயலாளரிடம் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களின் கூட்டம் ஒன்றை தடுப்பதற்கு சந்திரிக்கா முயற்சித்தமையே அவரது கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய முக்கிய காரணமாகும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment