வெள்ளத்தில் மிதக்கும், டுபாய் விமான நிலையம்
துபாயில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் சில விமானங்கள் அருகில் உள்ள விமான நிலையங்களுக்குத் திசை திருப்பி விடப்பட்டுள்ளன.
அத்துடன் சில விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் சில விமானங்களின் சேவை தாமதமடைந்துள்ளது.
பலத்த மழை காரணமாக விமான ஓடுபாதைகள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான்; அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக.
ReplyDelete(அல்குர்ஆன் : 7:57)
www.tamililquran.com