Header Ads



விக்னேஸ்வரனை நான், திருமணம் முடிக்கவில்லை - வாசுதேவ

வடமகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரனின் மகனும் தனது மகளும் திருமணம் முடித்துள்ளார்கள் என்றாலும் தாமும் அவரும் அரசியல் ரீதியாக மனம் முடிக்கவில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒரு பௌத்த நாடு அல்ல என வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் வாசுதேவ நாணயக்காராவிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அத்தோடு அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தம் குறித்தும் இங்கு கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

அந்த உடன்படிக்கையை ஒருபோதும் இந்த அரசாங்கம் கைச்சாத்திடபோவதில்லை என அவர் சுட்டிக்காட்டினார். அவ்வாறு கைச்சாத்திட்டால் இந்த அரசாங்கமே பதவியில் இருக்காது எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டார்.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் நீங்கள் அமைச்சர் பதவியிலிருந்து விலகி செல்வதாக இதற்கு முன்னர் தெரிவித்திருந்தீர்கள். அவ்வாறு கைச்சாத்திட்டால் நீங்கள் பதவியிலிருந்து விலகுவீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் தாம் அவ்வாறு கூறவில்லை என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.