மகிந்த பயணித்த கெலிஹெப்டர், அவசரமாக தரையிறக்கம்
சீரற்ற காலநிலை காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பயணித்த உலங்குவானூர்தி பலாங்கொடை நகர மைதானத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலை மற்றும் கனமான பனிமூட்டம் காரணமாக இன்று -19- முற்பகல் 11.25 அளவில் உலங்குவானூர்தி பலாங்கொடை நகர சபை மைதானத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச வேறு ஒரு வாகனத்தில் ஏறி பலங்கொடையில் இருந்து பண்டாரவளை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
Post a Comment