ஜனாதிபதியின் சிம்மாசன உரைக்கு, ஆதரவாக வாக்களிப்பேன்: மரிக்கார்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் ஆற்றும் சிம்மாசன உரையை தோற்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த சிலர் முயற்சித்தாலும் தான் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களிக்க போவதாக அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியின் சிம்மாசன உரையை தோற்கடிக்க வேண்டும் என்று பேசுவது ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள சில அறிவற்றவர்களின் பேச்சு எனவும் அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி உட்பட அரசாங்கம் செய்யும் நல்ல விடயங்களுக்கு ஆதரவளிக்கும் அதேவேளை எதிர்க்கட்சி என்ற வகையில் அவர்கள் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அழுத்தங்களை கொடுக்க வேண்டும் எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.
NEE KAI UYARTHINAL ENNA, UYARTHAVITTAAL ENNA,
ReplyDeleteMOTTU KATCHIYIL UNAKKU, IDAM KIDAIKAVE
KIDAIKATHU.
THULLINA MAADU POTHI SHUMAKKUM.