புத்தளம் வாழ் மக்களுக்கு, பிரதியுபகாரம் செய்த யாழ்ப்பாண முஸ்லிம்கள் (படங்கள்)
1990 ஆம் ஆண்டு யாழில் இருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் குடியேறிய போது தங்களுடைய வளங்களை எம்முடன் பகிர்ந்து கொண்ட புத்தளம் வாழ் மக்களுக்கு பிரதியுபகாரம் செய்யும் நோக்கில் யாழ்ப்பாண தனவந்தர்களான சாகுல் ஹமீட் ஹாஜியார் மற்றும் அவருடைய மகன் நியாஸ் ஹாஜியார், நஸ்ருன் ஹாஜியார், நஜாத் ஹாஜியார் ஆகியோரின் உதவியுடன் யாழ் முஸ்லிம் மக்கள் அமைப்பினூடாக (JMPP) புத்தளம் தள வைத்தியசாலையில் பல நிகழ்ச்சிகள் இன்று (29.12.2019) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியின் முதற்கட்டமாக JMPP மற்றும் யாழ் முஸ்லிம் விளையாட்டு கழகம் (JMSC) இனைந்து நடத்திய இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் சுமார் 20 க்கு அதிகமானோர் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் கட்ட நிகழ்வாக புத்தளம் தள வைத்தியசாலை தலைமை பீடத்தின் வேண்டுகோளுக்கு இணங்க JMPP அமைப்பினால் 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உபகரணங்கள் (குளிர் சாதனப்பெட்டிகள், சக்கர நாற்காலிகள், நாற்காலிகள், விசிறிகள், வளிப்பதனாக்கிகள், பிளாஸ்டிக் மற்றும் மர இறாக்கைகள்...etc) கையளிக்கும் வைபவம் இடம்பெற்றது.
இறுதியாக புத்தளம் தள வைத்தியசாலையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு பழப்பொதி அன்பளிப்பு செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.
Post a Comment