சம்பிக்கவுக்கு விளக்கமறியல்
இன்று (18) மாலை கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கொழும்பு குற்றவியல் பிரிவால் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நாளை (19) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு சட்டமா அதிபரினால் கொழும்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு பெற்றுக் கொடுக்கப்பட்ட ஆலோசனையின் படி முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றல் முற்படுத்தப்பட்டுள்ளார்.
கவனயீனத்துடன் வாகனத்தை செலுத்தி நபரொருவரை படுகாயமடையச் செய்தமை மற்றும் வீதி விபத்தின் போது வேறு ஒரு நபரை சாரதியாக அடையாளப்படுத்தியதாக முன்னாள் அமைச்சருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Don't give excuse bring out true.
ReplyDelete