பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும், சுதந்திரக்கட்சியை கீழே தள்ளி விட இடமளிக்க முடியாது
நாட்டின் தற்போதைய அரசாங்கத்தை வெற்றி பெற செய்வற்கான ஒரு சக்தியாக செயற்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை கீழே தள்ளி விட இடமளிக்க முடியாது என அந்த கட்சியின் பொதுச் செயலாளரான ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஹோமாகமை மகா வித்தியாலத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மூன்றாம் நிலைக்கு தள்ளும் வேலைத்திட்டத்தை நான் எதிர்க்கின்றேன். கட்சியின் பொதுச் செயலாளர் என்ற வகையில் ஏனையோரை விட கட்சி தொடர்பான கூடுதல் பொறுப்பு எனக்குள்ளது.
எப்படியான சவால்கள் வந்தாலும் கட்சியை பாதுகாக்கும் வேலைத்திட்டத்திற்காக அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment