"யார் வென்றாலும் நமது, சமூகம் தோற்றுவிடக் கூடாது"
ஒன்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த தேர்தலில் யாரோ ஒரு சிங்கள தலைவர்தான் வெல்லப்போகிறார். நாங்கள் முஸ்லிம்கள் யாருக்கும் ஆதரவளிக்க உரிமை கொடுக்கப்பட்டவர்கள். யாரும் யாருக்காகவும் எதிராகவும் எழுத, பேச உரிமை உண்டு. ஆனால் தனிப்பட்ட வகையில் ஒருவரின் தன்மானத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை.
யார் வென்றாலும் நமது சமூகம் வெல்ல வேண்டும் என்பதே எனது குறிக்கோள். கோட்டா வென்று முஸ்லிம்களுக்கு அநியாயம் நடந்தால் அதில் நான் இருக்க மாட்டேன். நிச்சயம் விலகுவேன். இப்படி ஒரு முஸ்லிம் கட்சி தலைவரும் சொல்ல மாட்டார்.
சஜித் ஜனாதிபதியாகி முஸ்லிம்களுக்கு இப்போது போல் அநியாயம் நடந்தால் உடனடியாக சஜித் அமைச்சரவையில் இருந்து விலகுவேன் என சொல்லும் தைரியம் ஒரு முஸ்லிம் கட்சி தலைவருக்கு உண்டா?
இந்த 2005 முதல் இன்றுவரை அப்படி நடக்கவில்லை. விலகுவோம், விலகுவோம் என சொல்வார்களே தவிர தேர்தல் அறிவிக்கப்படும் வரை விலக மாட்டார்கள்.
ஆகவே யார் வென்றாலும் நமது சமூகம் வெல்ல வேண்டும். அதில்த்தான் நாம் குறியாக இருக்க வேண்டும். சஜித் வென்றால் ஹக்கீம், ரிசாத் உட்பட பெரும் தலைவர்கள் ஆட்சியில் இருப்பார்கள். மீண்டும் முஸ்லிம்களுக்கு பாதிப்பு வந்தால் அவர்களை சரியாக பணியாற்ற சொல்லும் தைரியம் முஸ்லிம் சமூகத்துக்கு இருக்குமானால் சந்தோசப்படுவோம்.
கோட்டா ஜனாதிபதியானால் ஓரிரு முஸ்லிகளே அவரின் அமைச்சரவையில் இருப்பர். இப்போதைக்கு பைசர் முஸ்தபா, மஸ்தான் மட்டும்தான். சில வேளை ஹரீஸ், இஸ்மாயில் ஓடி வரலாம். ஆனால் அமைச்சரவையில் இடம் கிடைப்பது சந்தேகம்.
கோட்டாவின் அரசில் அதிக முஸ்லிம் பலம் இல்லாத நிலையிலும் முஸ்லிம்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நம்பிக்கைதான் வாழ்க்கை. கோட்டாவின் அரசில் முஸ்லிம்கள் பலர் இருக்கும் அளவு அடுத்த பொதுத்தேர்தலை முஸ்லிம் சமூகம் பயன் படுத்த வேண்டும். சந்தர்ப்பத்துக்கு கோட்டா வென்றபின் ஓடி வரும் பச்சோந்திகளை நிராகரிக்க வேண்டும்.
ஆகவே யார் வென்றாலும் சமூகம் வெல்லும் நடவடிக்கையில் சமூகம் கவனமாக இருக்க வேண்டும்.
சஜித் சில வேளை வென்றால், அவர் பக்கம் பல முஸ்லிம்கள் இருப்பதால் முஸ்லிம் சமூகம் பாதுகாப்பு பெறுமாயின் சந்தோசப்படுவோம். அவ்வாறின்றி மீண்டும் ரதன தேரர் உண்ணாவிரதம் இருந்தால் முஸ்லிம் அமைச்சர்களை களட்டி விடுபராக சஜித் இருந்தால்.....
முஸ்லிம் சமூகம் பெரும்பாலும் ஓட்டு போட்ட சஜித் வென்றும் முஸ்லிம் சமூகம் தோற்றுப்போகும்.
-முபாறக் அப்துல் மஜீத்
Neenga entha ministry
ReplyDeleteTalayyum.wilngaathu...kaalum wilngaathu umakku....
ReplyDeleteமுட்டாள் இன்னுமா உனக்கு புரியவில்லை.கடந்த நான்கு வருடமாக எம்மை தாக்கிய இனவாத கும்பல்கள் இறுதியில் தஞ்ஞம் புகுந்திருப்பது நீர் இருக்கும் அணியில்.ஆனால் நீயோ உல்டா கருத்துக்களை வெளியிட்டு எம்மை முட்டாலாக்க பார்க்கிராய் முனாபிக்
ReplyDeleteநிச்சயமாக தோற்றுப்போகாது நீங்கள் சொல்லும் அமைச்சரவைக்கு பொது தேர்தலில் பெரும்பான்மை பெற வேண்டும் அப்போது இந்த சிங்கள தலைமை நீங்கள் குற்றம் சாட்டும் முஸ்லிம் தலமைகளிடம் ஓடி வரும்.மீண்டும் இனவாத சக்திகள் வாயை மூடிக்கொள்ளும்..😄
ReplyDeleteயார் ஆட்சிக்கு வந்தாலும் வராஙிட்டாலும் முஸலிம்கள் கோழைகளாக இருக்கும் வரை சிங்களவர்கள் அடிப்பார்கள்
ReplyDeleteJaffna Muslim news - becoming so cheap by publishing this fellows chit
ReplyDeleteLet him mental, nonsense...
ReplyDeleteநீங்கள் தான் நீருடன் சேர்ந்து அடித்துச் செல்லப்பட்ட காய்ந்த சருகுகள் போன்றவைக்கு நல்ல உதாரணம்.
ReplyDeleteThe trust hitherto we have placed on this site has been eroding slowly and gradually when it comes any comments not in favour to the editor are nicely ignored. This is not what we expect from the editor.
ReplyDelete