ராஜித்தவுக்கு எதிராக, நீதிமன்றில் மனு தாக்கல்
அமைச்சர் ராஜித்த சேனாரத்தனவிற்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று சட்டத்தரணி ஜனஜித் டி சில்வாவினால் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வெள்ளைவான் கடத்தல்கள் தொடர்பாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அண்மையில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி இருந்தார்.
இதில் கடத்தல்களுக்காக வெள்ளைவானை செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவரும், கடத்தலுக்கு உள்ளான ஒருவரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தநிலையில், கடத்தல்களுடன் தொடர்புடைய ஒருவர் தலைமறைவாக இருப்பதற்க உதவியளித்ததாக, அமைச்சர் ராஜித்த மீது குற்றம் சுமத்தி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், சட்டத்தரணி ஜனஜித் டி சில்வா, கடந்த 11ம் திகதி இதுதொடர்பாக அமைச்சர் ராஜித்தவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்திருந்தார்.
Post a Comment