“சஹ்ரானின் மனைவியை வைத்து, வீடியோ தயாரிக்கப்படுகின்றது”
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவின் வெற்றி உறுதியாகிவிட்டதெனத் தெரிவித்த, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, “தற்கொலைதாரியான சஹ்ரானின் மனைவியை வைத்து, எமக்கெதிராக சேறுபூசும் வீடியோ தயாரிக்கப்படுகின்றது” என்றார்.
நாவலப்பிட்டிய மஹிந்தானந்த மன்ற நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தோல்வியை தாங்கிக்கொள்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும், புதிய ஜனநாயக முன்னணியினருக்கும் முடியாது. ஆகையால், எமக்கெதிரான சேறுபூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்று தெரிவித்த அவர், அதனோர் அங்கமாக, ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதான காரணமாக அமைந்திருந்த, சஹ்ரானின் மனைவியை வைத்து வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.
அந்த வீடியோவை, நவம்பர் 13ஆம் திகதியன்று கசியவிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதனூடாக, சஹ்ரானுக்கும் கோட்டா, மஹிந்தவுக்கும் இடையில் நெருங்கிய உறவொன்று இருந்ததாக, காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர் என்றார்.
Post a Comment