அரசியல் தலைவர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடாத்த வேண்டாம்
நாட்டை நேசிக்கும் ஒருவரை தலைவராக தெரிவு செய்ய வேண்டுமென எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
அரசியல் தலைவர்களுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடாத்த வேண்டாம் என அவர் சகல ஜனாதிபதி வேட்பாளர்களிடமும் கோரியுள்ளார்.
யுத்துகம என்னும் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இன்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வடக்கின் ஐந்து கட்சிகள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பிலும் அவர் இதன் போது தனது விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.
Post a Comment