ரணிலுடன் கலந்துரையாடிவிட்டு, மைத்திரியுடன் சஜித் பேச்சு
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் நேற்றிரவு முக்கியமான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் தவிசாளாரான அமைச்சர் கபீர்ஹாஸிம், பொதுச் செயலாளரா அமைச்சர் அகிலவிராஜ் காரயவசம் மற்றும் அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, அலரிமாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அவர்கள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment