Header Ads



நாட்டிற்கு இரும்பு போன்ற, தலைமைத்துவம் தேவை - அதனை வழங்க நான் தயார் - சஜித்

தானும் எதிர்வரும் நாட்களில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்துவதாகவும் அதனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பிரதிவாதிகளுக்கு நல்ல பாடம் ஒன்றை புகட்டுவதாகவும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

வாரியபொல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ஊடகவியலாளர்கள் கேட்கும் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்க தான் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

நாட்டிற்கு இரும்பு போன்ற தலைமைத்துவம் வேண்டும் எனவும் அவ்வாறான தலைமைத்துவத்தை வழங்க தான் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதனை அடுத்து அவர் மாஹோ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். 

இதன்போது கருத்து தெரிவித்த அவர், தான் ஜனாதிபதியான பின்னர் எந்தவொரு வெளிநாட்டு சக்திகளுக்கும் அடிபணியாதவாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். 

அன்பான மக்களின் மனதில் உள்ள துக்கம் தொடர்பில் தான் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அதனால் அனைத்து தேர்தல் பிரிவுகளுக்கும் கஷ்டம் பாராது தான் வந்து பேசுவது நாட்டை கட்டியெழுப்புவதற்கே எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

3 comments:

  1. இவன் ஜனாதிபதியாக என்ன என்ன தாலம் போடுறான்!எண்ட வாக்கு jvp க்கு தான்.

    ReplyDelete
  2. நாட்டை தூர நோக்குடன் சிந்திக்க தலைவராக அனுர காணப்படுகின்றார்,
    ஆனால் அவரால் நாட்டை வளப்படுத்த குறைந்து 20 வருடங்கள் ஆகும், அனுர ஒரு இணவாதம் இல்லாத தலைவன், சிறுபான்மையினருக்கான கடந்த காலங்களில் குரல் கொடுத்தவர்

    ReplyDelete
  3. Jvp?i thing your just younger.you dont know about jvp.you have to learn about jvp.

    ReplyDelete

Powered by Blogger.