சஜித் பிரேமதாசாவை கிறீஸ் பிசாசு, என்று மக்கள் தாக்கக் கூடும்
நாட்டில் எதை செய்ய வேண்டுமானாலும் சிறந்த பொருளாதாரம் இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அனுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று -16- நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் அவர்,
நாட்டில் பொருளாதாரம் மிகவும் பாரதூரமாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கையின்படி, பிராந்தியத்தில் குறைந்த வளர்ச்சி கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது. இதுதான் ரணில் - சஜித் ஆகியோரின் கீழ் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி.
மத்திய வங்கியின் அறிக்கையின்படி, வருடத்தின் இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி வேகம் 1.6 வீதம். இந்த அழிவான பொருளாதார கொள்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் நாடு சோமாலியாவாக மாறிவிடும்.
இரவில் மாறு வேடத்தில் சென்று மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனரா என பார்க்க போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கூறுகிறார். கிறீஸ் பிசாசு என்று மக்கள் தாக்கக் கூடும் எனவும் அனுரபிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
Ayya neenga vantha athukkm melayo... Neenga kaattaatha greesa???
ReplyDelete