டெங்கு காய்ச்சலினால் மௌலவி, அஹ்ஸன் ஸலாமி வபாத்
ஓட்டமாவடி - காவத்தமுனையைச் சேர்ந்த மௌலவி புஹாரி முகம்மது அஹ்ஸன் ஸலாமி (வயது 21) இன்று (20) வாபாத்தானார்.இன்னாலில்லாஹி வஇன்னா.
டெங்கு காய்ச்சல் காரணமாக மூன்று நாட்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நேற்றிரவு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
அன்னாரின் ஜனாஸா தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(எச்.எம்.எம்.பர்ஸான்)
innalillahi wa inna ilaihi rajiuoon
ReplyDelete