படையிலிருந்து தப்பியவர்களினால் மொரட்டுவயில் குண்டு புதைக்கப்பட்டிருக்கலாம் - பொலிஸ் ஊடகப்பிரிவு
மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ராவத்தாவத்தை பிரதேசத்தில் காணியொன்றை சுத்தம் செய்யும் போது 3 வெடி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் இது தொடர்பில் மொரட்டுவை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குண்டுகளை மீட்டுள்ளனர்.
நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை இவ்வாறு குண்டுகள் மீட்க்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. மீட்கப்பட்ட குண்டுகள் தொடர்பில் பொலிஸ் பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தாவது,
இந்த குண்டுகள் மிகவும் பழமையானவையாகக் காணப்பட்டாலும் வெடிக்கக் கூடிய வகையிலேயே காணப்பட்டன. எனவே இவற்றை விமானப்படையினர் வெடிக்கச் செய்து செயழிலக்கச் செய்துள்ளனர்.
அத்தோடு இவை முப்படையிலிருந்து தப்பிச் சென்றவர்களால் இங்கு வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸாரால் சந்தேகிக்கப்படுகிறது.
(எம்.மனோசித்ரா)
Post a Comment