Header Ads



ஹேமா பிரேமதாஸவை, ரணில் மேடைக்கு அழைத்துச்சென்ற காட்சி மனதை நெகிழச் செய்தது - அஸாத் சாலி


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சேற்றுக்குள் வீழ்ந்து மஹிந்தவை மீண்டும் தூக்கிவிடக் கூடாது என, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அஸாத் சாலி தெரிவித்தார்.

   பிரதமர் ரணில், சஜித் பிரேமதாஸவின் தாயார் ஹேமா பிரேமதாஸவை மேடைக்கு அழைத்துச் சென்று, கட்சி ஆதரவாளர்கள் முன்னிலையிலேயே சஜித்தின்  பெயரை அறிவித்தமையானது, மக்கள் மனதை நெகிழச் செய்தது. பிரதமர் ரணில் தொடர்பில் எனக்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்த போதும், இந்த விடயத்தில் அவரைப் பாராட்டுகின்றேன்.  கோத்தாவைப் பொறுத்த வரையில், யுத்த காலத்தில் உயிருக்குப் பயந்து நாட்டை விட்டு ஓடியவர். அதிகாரம் கிடைத்த பின்னர் இங்கு வந்து ஹிட்லர் போன்று செயற்பட்டவர். எனவே, மீண்டும் இவ்வாறான பீதியான யுகத்தை மக்கள் விரும்பவில்லை  என்றார்.

No comments

Powered by Blogger.