காதி நீதிமன்றில் பாலியல் இலஞ்சம் - 90,000 தமிழ் - சிங்களவர் இஸ்லாத்திற்கு மாற்றப்பட்டு திருமணம்
இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளில் 90 ஆயிரம் தமிழ், சிங்களவர்கள் முஸ்லிம் மதத்திற்கு மாற்றப்பட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் வலுக்கட்டாயமாக இவையெல்லாம் இடம்பெற்றுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்தார். முஸ்லிம் காதி சட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் திருமண சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் தனிநபர் பிரேரணை ஒன்றினையும் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரவுள்ளதாவும் அவர் கூறினார்.
அதுரலியே ரதன தேரர் மற்றும் சிங்கள அமைப்புக்கள் இணைந்து நேற்று கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இக் கருத்துக்களை முன்வைத்தார். அவர் மேலும் கூறுகையில்,
திருமண சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர தனி நபர் யோசனை ஒன்றினை பாராளுமன்றத்திருக்கு கொண்டு வரவுள்ளேன். இன்று (நேற்று) நான் பாராளுமன்றத்தில் இதனை சமர்ப்பித்துள்ளேன். இன்று திருமண சட்டம் மூலமாக பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த 20 ஆண்டுகளில் 90 ஆயிரம் தமிழர்களும் சிங்களவர்களும் முஸ்லிம் முறைமைக்கு மாற்றப்பட்டு திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ளனர். வலுக்கட்டாயமாக இவையெல்லாம் இடம்பெற்றுள்ளது. இதில் 97 வீதம் வற்புறுத்தல் என்றே பதிவாகியுள்ளது. இலங்கையில் சகல பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் உள்ளன. 13 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் திருமணம் செய்து கொடுக்கப்பட்டுள்ள நிலைமைகள் உள்ளன. இது இலங்கையில் பாரிய சமூக பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.
இவ்வாறு மாற்றுத் திருமணம் செய்துள்ளவர்கள் மீண்டும் விவாகரத்தை செய்துகொண்ட நேரங்களிலும் காதி சட்டத்தின் பிரகாரம் பிள்ளைகள் முஸ்லிம் சமூகத்தில் தடுத்து வைக்கப்படுகின்றனர். ஆகவே காதி நீதிமன்றம் இன்று முஸ்லிம் மக்கள் மத்தியிலும் பாரிய எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
அதேபோல் தமிழ் – சிங்கள மக்களின் எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. காதி நீதிபதிகள் என கூறிக்கொண்டு சட்ட அறிவு இல்லாத முஸ்லிம் நபர்கள் பலர் செயற்பட்டு வருவதாக முறைப்பாடுகள் முஸ்லிம் சமூகத்தில் இருந்தே கிடைக்கப்பெற்றுள்ளன. ஆகவே இது பாரதூரமான விடயமாகும். முஸ்லிம் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சமூகத்தில் உள்ள அச்சம் காரணமாக வெளியில் கூறாது உள்ளனர்.
இலங்கையில் 17 வயது வரையில் கட்டாய கல்வி அவசியம். இவற்றை மீறி இந்த காதி சட்டம் செயற்பட்டு வருகின்றது. காதி நீதிமன்றங்கள் இயங்குவதற்கும் அப்பால் பொதுவான சட்டத்தில் அனைவரையும் ஒரே சட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும். காதி சட்டம் முற்று முழுதாக ஆண்களின் ஆதிக்கத்தில் மட்டுமே இயங்குகின்றது. காதி நீதிமன்றத்தில் நியாயம் கேட்டுச் செல்லும் பெண்களுக்கு பாலியல் இலஞ்சம் கேட்கும் நிலைமை உள்ளதாக முறைப்பாடுகள் உள்ளன. ஆதாரத்துடன் நாம் இவற்றை நிருபிக்க முடியும். ஆகவே அனைவருக்கும் ஒரு சட்டம் இயங்க வேண்டும். கற்ற முஸ்லிம் சமூகம் நிச்சயமாக இதனை ஏற்றுக்கொள்வார்கள். இப்போது நாம் கொண்டுவரும் சட்டத்தை சகல ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் முன்வைக்கவுள்ளோம்.
ஜனாதிபதியாக வருபவர்கள் இதனை தமது முதல் காரணியாக கருதி நடைமுறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வார்கள் என நம்புகின்றோம் எனவும் அவர் கூறினார்.
இப்படியான பொய்கலை,கட்டுக் கதைகளை தயவு செய்து பிரசுரிக்காதீர்கல்
ReplyDeleteCan any of our politicians who have a backbone refute his allegations? We know he is working as henchman for some politicians.
ReplyDeleteம் தொடங்கிட்டன் சொங்கி மோதி பாரு
ReplyDeleteஒவ்வோர் முஸ்லிமும் தஹஜ்ஜத் தொழுது இந்த காபிரையும் அவனைப்போன்ற அவனுடைய பின்னால் இருந்து முஸ்லிம்களின் மனதை அநியாயமாகப் புண்படுத்தி அவர்களைக்கேவலப்படுத்தும் அத்தனை காபிர்களையும் மிகவும் கேவலப்படுத்தி உலகில் அவமானப்படுத்தி அழித்துவிடுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம். இந்தக் காபிரின் பின்னால் அவனுக்கு தூண்டுதல் வழங்குவது நாட்டின் உயரிய அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் தான். அத்தனை குப்பார்களையும் அழிக்குமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சுவதைத்தவிர இதற்குவேறு மாற்றீடு கிடையாது.
ReplyDelete
ReplyDeleteTheeeeero,
ReplyDeleteWho could you find this measurement ? May your mouth decay by lies.
Bauththathtai parappame, verothaththai parappum bauththan.
ReplyDelete