ஜனாஸா தொழுகைக்கு அனுமதி மறுத்தமைக்காக, மாதம்பிட்டி பள்ளிவாசல் நிர்வாகம் மன்னிப்பு கோரியது
மாதம்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசலில் ஜனாஸா தொழுகையொன்று நடாத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பள்ளிவாசல் வளாகத்திலுள்ள பாலர் பாடசாலையில் குறிப்பிட்ட ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டதாக கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனத்துக்கு முறைப்பாடு கிடைத்ததையடுத்து கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனம் விசாரணையொன்றினை நடாத்தியது.
அறியாமல் செய்த இந்த தவறுக்கு சம்பந்தப்பட்ட மஸ்ஜித் நிர்வாகம் ஜனாஸாவுக்கு உரிய குடும்ப அங்கத்தவர்களிடம் மன்னிப்புக் கோரியதாக கொழும்பு மாவட்ட மஸ்ஜித்கள் சம்மேளனத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
நடைபெற்ற விசாரணையில் பாதிக்கப்பட்ட ஜனாஸாவுக்கு சொந்தமான குடும்ப உறுப்பினர்களும், பள்ளிவாசல் நிர்வாகம், கொழும்பு வடக்கு மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் மொஹமட், கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இது தொடர்பில் அஸ்லம் ஒத்மான் கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான சம்பவங்கள் இதன்பிறகு கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்களில் இடம்பெறாதிருப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்தோடு நாடளாவிய ரீதியில் எந்தப் பள்ளிவாசலிலும் இவ்வாறான சம்பவங்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளோம்.
மாதம்பிட்டி பள்ளிவாசலில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்கு 3 ஆம் தரப்பே காரணமாக இருந்துள்ளது என்றார்.
Athu Enna 3 aam tharappu?
ReplyDeleteMuttal thanam than Karanam endru sollalam thane
ReplyDeleteமூன்றாம் தரப்பு என்றத விட 3ம் வகுப்பு சொல்லுங்கள் என்று
ReplyDeleteநீங்க எல்லாம் எந்த குறூப் டா? சிறிய பிழைகளுக்கும் தவறுகளுக்கும்தான் மன்னிப்பு. ஒரு முஸ்லிம் வபாத் ஆனா பள்ளிக்கு கொண்டுபோய் தொழுவிக்க வேண்டியதுதானே. அதுக்கு என்னடா சட்டம் பேசுறீங்க. இந்தப் பெரிய அநியாயத்தை எவ்வாறு மன்னிக்க முடியும். இந்த துஆக்களுக்கான பெறுமதியினை அறியாத இந்த மடையர்களை எப்படி சமூகம் பள்ளி நிர்வாகத்தில் வைத்துள்ளது. இதற்குரிய ஒரேஒரு தண்டனை பள்ளியின் தலைவர் செயலாளர் பொருளாலர் என்னைக்கோ ஒருநாள் வபாத் ஆவார்கள்தானே. அந்த மையித்துகளை பள்ளியில் வைத்துத் தொழவைக்கக்கூடாது. மூன்றாம் தரப்பாம் நான்காம்; தரப்பாம். ஏன் ஐந்தாம் தரப்பு வரவில்லையா?
ReplyDeleteஅமீர்சாப்பும் தப்லீக் ஜமாத்காரார்ஹளுந் காரார்ஹளும் முக்கியமான மஷூராவில் இருந்தார்கலாம் அதுதான் மைய்யித்தை வெளியில் தொழ சென்னார்களாம்
ReplyDeletePAKKATHIL PALA PALLIKAL IRUKKA,
ReplyDeletePIRACHINAI EDUKKAVA ANDA PALLIKKU
JANAZAVA KONDUPONEENGA.
NALEEMIKKU MARKAM THERIUM THANEY.
NATKUNAM, NIZAANAM, RASOOLULLAHVIN
POZANAIKAL.
JAMATH ISLAMI ALLA