வாயில் வற்றாளை கிழங்கு நடும் ஒருவரை வேட்பாளராக UNP களமிறக்கினால் தோல்வியடைய நேரிடும் - பீல்ட்மார்ஷல்
முன்னாள் இராணுவத் தளபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு இந்த நாட்டை ஆட்சி செய்ய முடியும் என தாம் நினைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில் இன்று ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்ட வேண்டுமாயின் நாட்டை பற்றி சிந்திக்கக் கூடிய ஒருவரை ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக களமிறக்க வேண்டும்.
சிலர் சாரத்தை தூக்கிக் கொண்டு நான்தான் வேட்பாளர் என கூச்சல் போட்டாலும் அதனை நாம் கண்டுகொள்ள மாட்டோம்.
கோத்தபாய ராஜபக்ச நாட்டை ஆட்சி செய்ய பொருத்தமானவர் என நான் அன்றோ இன்றோ கருதியதில்லை.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சி பலவீனமான ஒருவரை களமிறக்கினால் நிச்சயமாக தோல்வியைத் தழுவ நேரிடும், இது எதிர்த்தரப்பில் போட்டியிடுபவரது வெற்றி வாய்ப்பை உறுதி செய்துவிடும்.
வாயில் வற்றாளை கிழங்கு நடும் ஒருவரை வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கினால் தோல்வியடைய நேரிடும்.
நாட்டில் மிதக்கும் வாக்குகளே இம்முறை வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
furkanhaj (AKP)Says வாயில் வற்றாளை கிழங்கு நடுபவர் என்று யாரைக்குறிப்பிடுகிறார்?சஜித்தயா? சரத்துக்கு சஜித்தோடு என்ன கோபம்?சஜித்துக்கு மைத்திரி ஆதரவு என்பதாலா? என்ன சொல்ல வருகிறார் என்று அவருக்கும் புரிய வில்லை.எமக்கும் புரியவில்லை.
ReplyDeleteThis guy wants to be a candidate.
ReplyDelete