Header Ads



ஐதேக கூட்டணி தலைவர்கள் இன்று முக்கிய முடிவு

புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக,  ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று -17- சந்திக்கவுள்ளனர்.

அமைச்சர் ராஜித சேனாரத்னவின் இல்லத்தில் இன்று காலை இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக, தனது பெயரை வெளியிட விரும்பாத பங்காளிக் கட்சியொன்றின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இன்றைய கூட்டத்தில் புதிய கூட்டணி உடன்பாட்டில் கைச்சாத்திடப்படும் நாள் குறித்து முடிவெடுக்கப்படும். அத்துடன் கூட்டணியின் யாப்பு தொடர்பாகவும், இணக்கப்பாடு எட்டப்படும்.

உடன்பாட்டில் கையெழுத்திடப்படும் நாளன்று, அதிபர் வேட்பாளரை அறிவிக்கும் திட்டம் குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. டேய் பண்ணி களஆ , சட்டு புட்டேனு 1 முடிவெடுங்கோடா

    ReplyDelete

Powered by Blogger.