பாலித்த தேவப்பெருமவும், அவருடைய மகனின் முன்மாதிரியும்...!!
#இலங்கையில் #இப்படியும் #அரசியல்வாதிகளும், அவர்தம் #பிள்ளைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்..
நேற்று முன்தினம் 21.08.2019 துறைமுக அதிகாரசபையில் சில இளைஞர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டது.
அதில் ஒரு ஆறு இளைஞர்கள் நான் கடமையபரியும் பேலியகொட கொல்கலன்களை கையாளும் இடத்துக்கு வந்தனர்.
இங்கு என்னோடு இருக்கும் இளைஞன்,
அமைதியாக நீண்டநேரம் பல்வேறு விடயங்கள் கேட்டு தெரிந்து கொண்டான்.
என் மகனின் வயதுடைய ஒருவன் என்பதால் சில புத்திமதிகளை சொல்லிக்கொடுத்தேன்.
தனது உழைப்பில் ஒரு வீட்டைக்கட்டிக் கொள்வதும், ஒரு வாகனம் வாங்குவதும்தான் தனது திட்டம் என்று சொன்னான்.
நானும் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
பிறகுதான் தெரியவந்தது,, அவன் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான பாலித தெவரப்பெறும என்பவரின் மகன் என்று.
அவனிடம் தனது அப்பா ஒரு பிரதியமைச்சர் என்ற மமதையையோ கர்வத்தையோ காணமுடியவில்லை.
அது பற்றி யாரிடமும் சொல்லவுமில்லை.
மீண்டும் அவனை நீ ஏன் இப்படியான சாதாரண பதவிக்கு வந்தாய் அப்பாவின் அரசியல் செல்வாக்கை வைத்து பெரிய விடயங்களை சாதிக்கலாமே என்று கேட்டதற்கு..
எங்கள் அப்பாவும் அப்படியில்லை, நானும் அப்படியில்லை இப்படி வேலை செய்து அனுபவப்பட்டு முன்னேறவே விரும்புகிறேன் என்றான்.
Mohamed Nawzar
the great politician and the good behavior of the son
ReplyDeleteGreat human. Congratulations.
ReplyDeleteBeruwala aluthagama kalavarthin pothu Mr. Palithavin pangalippu alappariyathu.
ReplyDeletevery good...
ReplyDeleteGreat Father Great son.. All the best for this young mans good Future.
ReplyDelete