Header Ads



தங்கத் துப்பாக்கி வைத்திருக்கும் ஜனாதிபதி மைத்திரி - எங்கிருந்து கிடைத்தது தெரியுமா..?

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்க துப்பாக்கி ஒன்று உள்ளதாக செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முழுமையாக தங்கத்தினால் செய்யப்பட்ட துப்பாக்கி, இயங்கக் கூடிய நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தங்க துப்பாக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பரிசாக கிடைத்துள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியினால் இந்த துப்பாக்கி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக உலகின் பல நாடுகளை சேர்ந்த அரச தலைவர்கள் பெறுமதியான பல பரிசுகளை வழங்கியுள்ளனர்.

இந்த பரிசுப்பொருட்களை பொலன்னறுவையில் புதிதாக திறக்கப்பட்ட அருங்காட்சியகத்திற்கு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக செயலக உயர் அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.