ஜப்பானுக்கு தப்பிச் செல்ல முயன்ற, சஹ்ரானின் சகா கைது
(எம்.எப்.எம்.பஸீர்)
21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல்களின் சூத்திரதாரியாக கருதப்படும் மொஹம்மட் சஹ்ரான் என்பவரின், சகாக்களில் ஒருவரான தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் ஜப்பானுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் (சி.ரி.ஐ.டி.)கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த ஸைன் அன்சார் மொஹம்மட் ரினாஸ் எனபவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாகவும், நேற்று இந்த கைது இடம்பெற்றதாகவும், சந்தேக நபரை தற்போது பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 90 நாள் தடுத்து வைத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்
Post a Comment