Header Ads



எதிர்வரும் தேர்தல்களில், ரணிலினால் வெற்றிபெற முடியாது

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் வெற்றிப் பெற்றாலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிப் பெற முடியாதென, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன ​தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று -17- கண்டியில் இடம்றெ்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாப்பதற்காக, தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னின்றாலும் கீழ் மட்டத்திலுள்ள இந்து மக்கள் முற்றாக அரசாங்கத்தை எதிர்ப்பதாகவும் அவர்களும் அரசாங்கத்தை மாற்ற தயாராகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.