Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கையாள, வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்க திட்டம்

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை கையாள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்ற நிலையில், தங்களுக்கிடையிலான சந்திப்புக்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட தரப்பினரையும் சந்தித்திருந்தனர்.

இந்த நிலையில், முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான அடுத்தகட்ட சந்திப்பு எதிர்வரும் 10 ஆம் திகதி நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது.

No comments

Powered by Blogger.