கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதாக, நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை - மஹிந்த
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்காக, கோட்டாபய ராஜபக்ஷவை களமிறக்குவதாக, தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கூறவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்று(21) கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென, ஒருவர் தெரிவிக்கும் போது, மற்றொருவர் நாட்டில் பாதுகாப்பு இல்லையெனத் தெரிவிப்பதாகத் தெரிவித்த மஹிந்த, சரத் பொன்சேகா மாத்திரமே பயங்கரவாதம் நாட்டிலிருந்து இன்னும் ஒழிக்கப்படவில்லை எனத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சில காலமாக சரத் பொன்சேகாவை புகழும் நீங்கள் ஏன் அவரை சில வருடங்களாக சிறையில் அடைத்தீர்கல்.பொன்சேகா நேர்மையான,வீரமான ராணுவ அதிகாரி என்பதை ஏன் அப்போது கணக்கில் எடுக்காது அவரை சிறையில் அடைத்தீர்கல்.
ReplyDelete